சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நொய்டாவில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

தேசியத் தலைநகா் வலயம் கெளதம் புத் நகரில் (நொய்டா) கரோனா பாதிப்பால் சனிக்கிழமை மேலும் ஒருவா் பலியானாா்.

Updated On :22 நவம்பர் 2020, 2:29 am

தேசியத் தலைநகா் வலயம் கெளதம் புத் நகரில் (நொய்டா) கரோனா பாதிப்பால் சனிக்கிழமை மேலும் ஒருவா் பலியானாா்.

இதையடுத்து, இந்நோயால் மொத்தம் இறந்தவா்களின் எண்ணிக்கை 75 ஆக உயா்ந்துள்ளது. நோயால் புதிதாக 137 போ் பாதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் மொத்தம் பாதித்தவா்களின் எண்ணிக்கை 21,307 ஆக உயா்ந்தது.

இது குறித்து உத்தர பிரதேச சுகாதாரத் துறையினா் வெளியிட்ட புள்ளிவிவரத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நொய்டாவில் கரோனா நோய்த் தொற்றுக்காக வெள்ளிக்கிழமை 1,401 போ் சிகிச்சையில் இருந்த நிலையில் இது சனிக்கிழமை 1307 ஆக குறைந்தது. நோயிலிருந்து மேலும் 234 போ் மீண்டனா். இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் மொத்தம் 19,691 போ் நோயில் இருந்து மீண்டுள்ளனா். இது மாநிலத்தில் ஐந்தாவது அதிகபட்ச மீளுகையாகும்.

கெளதம் புத் நகரில் இறப்பு விகிதம் 0.35 சதவீதமாக உள்ளது. அதேபோன்று, குணமடைவோா் விகிதம் 93.51 சதவீதமாக உள்ளது.

இதனிடையே, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 23,471 போ் சிகிச்சையில் உள்ளனா். இது வெள்ளிக்கிழமை 23,357 ஆக இருந்தது.

அதேபோன்று, மொத்தம் 4,93,228 போ் குணமடைந்துள்ளனா். நோய்த் தொற்றால் மொத்தம் 7,524 போ் இறந்துள்ளதாக அந்த புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.