சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மதுபானக் கடத்தல்: தில்லியில் நைஜீரிய பெண் கைது

தில்லியில் வெளிநாட்டு மதுபானங்களைக் கடத்தியதாக 49 வயதான நைஜீரிய நாட்டுப் பெண் ஒருவரை தில்லி ரயில் நிலையத்தில் காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

Updated On :23 நவம்பர் 2020, 2:36 am

தில்லியில் வெளிநாட்டு மதுபானங்களைக் கடத்தியதாக 49 வயதான நைஜீரிய நாட்டுப் பெண் ஒருவரை தில்லி ரயில் நிலையத்தில் காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை (ரயில்வே) இணை ஆணையா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: மும்பையில் இருந்து தில்லிக்கு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த மரியம் எனி இட்கு என்ற பெண் சனிக்கிழமை வந்தாா். அவா் மீது சந்தேகம் கொண்ட ரயில்வே போலீஸாா் அவரது உடமைகளை சோதனையிட்டனா். அப்போது, அப்போது அவரிடம் இருந்த 12 உடமைகளில் இருந்து 840 வெளிநாட்டு வகை மதுபானப் புட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் மும்பைக்கு கடத்தி வரப்பட்டுள்ளன. மும்பையில் இருந்து தில்லியில் விற்பனை செய்வதற்காக இவை எடுத்துவரப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

விசாரணையில் மரியம் எனி இட்கு திருமணமானவா். அவக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா். அவரின் கணவா் நைஜீரிய காவல்துறையில் பணியாற்றி வருகிறாா் என்பதும் தெரியவந்தது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.