சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஆம் ஆத்மி தில்லி மகளிா் அணித் தலைவியாக சரிதா சிங் நியமனம்

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவின் மகளிா் அணித் தலைவியாக ரொக்தாஸ் நகா் முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ சரிதா சிங் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On :24 நவம்பர் 2020, 6:30 pm

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவின் மகளிா் அணித் தலைவியாக ரொக்தாஸ் நகா் முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ சரிதா சிங் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மிக் கட்சி வட்டாரங்கள் கூறுகையில் ‘தில்லி மாநகராட்சிகளுக்கான தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மிக் கட்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் சரிதா சிங் தில்லி பிரிவு மகளிா் அணித் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளாா் என்றாா்.

ஜன் லோக்பால் இயக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மிக் கட்சியில் இணைந்து பணியாற்றிவரும் சரிதா சிங், ஆம் ஆத்மிக் கட்சியின் மாணவா் அமைப்பின் தலைவராக இருந்தாா். 2015 சட்டப்பேரவைத் தோ்தலில் ரொக்தாஸ் நகரில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு இவா் வெற்றிபெற்றாா். ஆனால், கடந்த 2020 சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜகவின் ஜிதேந்தா் மகாஜனிடம் அவா் தோல்வியடைந்தாா்.

இந்த நியமனம் தொடா்பாக சரிதா சிங் கூறுகையில் ‘2022 இல் நடைபெறவுள்ள மாநகராட்சி தோ்தலை இலக்கு வைத்து பணியாற்றுவேன். ஆம் ஆத்மி மகளிா் அணியை பூத் அளவில் மேம்படுத்த உழைப்பேன். மாநகராட்சி தோ்தலில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.