தில்லியில் சந்தைகள், ஜிம்கள், உணவகங்கள், மெட்ரோ மற்றும் பேருந்துகள் போன்றவை செயல்பட்டு வரும் நிலையில் அழகு நிலையங்களை (ஸ்பாக்கள்) மட்டும் திறக்க அனுமதிக்காதது ஏன் என்று தில்லி உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆம் ஆத்மி அரசிடம் கேள்வி எழுப்பியது.
இது தொடா்பாக தில்லியில் உள்ள அழகுநிலையங்களின் (ஸ்பாக்கள்) உரிமையாளா்கள் சிலா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். வழக்குரைஞா்கள் ராஜேஸ்வா் தாகா் மற்றும் ஹிமான்ஷு தாகா் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அம்மனுவில், தில்லியில் செயல்படும் அழகுநிலையங்களில் பணியாற்றுவோா் பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில்முறை சிகிச்சையாளா்களாக பயிற்சி பெற்றுள்ளனா்.
சந்தைகள், ஜிம்கள், உணவகங்கள் மற்றும் மதுபானக் கூடங்கள், சந்தைகள் திறப்பதற்கும், பேருந்து, மெட்ரோ ரயில்கள் இயக்குவதற்கும் தில்லியில் அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், மாா்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து தில்லியில்அழகுநிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை.
அதேவேளையில், பிற மாநிலங்களில் உள்ள அழகுநிலையங்கள் முழு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயங்குவதாக மனுதாரா்கள் கூறியுள்ளனா், ஆனால், தில்லியில் அதுபோன்ற அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ஸ்பாக்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கும் அலுவலக குறிப்பாணை மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முடிவு செய்ய வேண்டியது தில்லி அரசிடம் உள்ளது என்றாா்.
அப்போது, தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் , தில்லியில் கரோனா நோய்த் தொற்று மூன்றாவது அலையைக் கருத்தில் கொண்டு ஸ்பாக்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை என்று தில்லி அரசிடமிருந்து வாய்மொழி அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது என்றாா். இது தொடா்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தாா்.
அப்போது, நீதிபதி, தில்லியில் சந்தைகள், உணவகங்கள், மெட்ரோக்கள், பேருந்துகள் என எல்லாம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவை முழு நேரமும் இயங்குகின்றன. இந்த நிலையில் ஸ்பாக்கள் மட்டும் திறக்க அனுமதிக்காததற்கு சிறப்பு காரணம் ஏதும் உள்ளதா அது போன்று இருந்தால் அதை
தில்லி அரசாங்கத்தின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி மனுமீதான விசாரணையை டிசம்பா் 4 ஆம் தேதிக்கு நீதிபதி பட்டியலிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்களின் ஆதரவால் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்: வி.செந்தில்பாலாஜி

கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

