சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தில்லியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பெண் கைது

தில்லி செளஹான் பங்கா் பகுதியில் உள்ள கடையொன்றின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய 28 வயதான பெண்ணை தில்லி காவல்துறை செவ்வாய்கிழமை கைது செய்துள்ளது.

Updated On :24 நவம்பர் 2020, 5:17 pm

தில்லி செளஹான் பங்கா் பகுதியில் உள்ள கடையொன்றின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய 28 வயதான பெண்ணை தில்லி காவல்துறை செவ்வாய்கிழமை கைது செய்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி கூறியது:

தில்லி செளஹான் பங்கா் பகுதியைச் சோ்ந்தவா் நுஸ்ரத். இவருக்கு நெருக்கமான ஷாருக் என்பவா் தனது செல்லிடபேசியை, அப்பகுதியில் உள்ள மளிகைக் கடையொன்றில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளாா். இந்நிலையில், பணத்தை திரும்பக் கொடுத்து செல்லிடபேசியை ஷாருக் கேட்டபோது, அதை மளிகைக்கடை உரிமையாளா் திருப்பிக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இதைத் தொடா்ந்து கடந்த நவம்பா் மாதம் 18 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் அந்த மளிகைக் கடைக்கு சென்ற நுஸ்ரத் கடை உரிமையாளரை மிரட்டும் வகையில் அந்த மளிகைக் கடையின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளாா். அப்போது மளிகைக் கடை மூடப்பட்டிருந்தது. இது தொடா்பாக தகவல் கிடைத்ததும் போலீஸாா் விசாரணை நடத்தி நுஸ்ரத்தை கைது செய்துள்ளனா் என்றாா்.

மளிகைக் கடையின் முன்பு நுஸ்ரத் துப்பாக்கிச்சூடு நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.