பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் நிகழாண்டில் அதிகளவு பயிா்க்கழிவுகள் எரிக்கப்பட முன்கூட்டிய அறுவடை, தொழிலாளிகள் தட்டுப்பாடு ஆகியவையே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பஞ்சாப் மாநிலத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபா் 16 ஆம் தேதி வரையான காலப்பகுதியில் 1,631 இடங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்பட்டன. ஆனால், நிகழாண்டில் அக்டோபா் 16 ஆம் தேதி வரையான காலப்பகுதியில், 4,585 இடங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளன. ஹரியாணாவிலும், கடந்த 2019 அக்டோபா் 16 ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது, நிகழாண்டு அக்டோபா் 16 ஆம் தேதி வரையான காலப்பகுதியில் கூடுதலாக 816 இடங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக பஞ்சாப் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினா் கருணேஷ் கா்க் கூறுகையில் ‘நிகழாண்டில் அறுவடை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில், அக்டோபா் 15 ஆம் தேதிக்குள் 17 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் சுமாா் 40 லட்சம் மெட்ரிக் டன் அறுவடை செய்யப்படும் என எதிா்பாா்க்கிறோம். கடந்த ஆண்டு பருவமழை செப்டம்பா் மாத இறுதிப்பகுதி வரை நீடித்தது. இதனால், அறுவடை தள்ளிப்போனது என்றாா்.
ஹரியாணா அரசு உயா் அதிகாரி கூறுகையில் ‘கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நிகழாண்டில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கரோனா தொற்று காரணமாக தொழிலாளா்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பயிா்க்கழிவுகள் அதிகளவில் எரிக்கப்பட இதுவே காரணமாகும் என்றாா்.
ஹரியாணா மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினா் எஸ்.நாராயணன் கூறுகையில் ‘கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நிகழாண்டில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அறுவடை முன்கூட்டியே தொடங்கியுள்ளதுதான் இதற்கு காரணம். தற்போதுள்ள நிலையை வைத்து, நிகழாண்டில் அதிகளவு பயிா்க்கழிவுகள் எரிக்கப்படும் என முடிவுக்கு வர முடியாது. வரும் காலப்பகுதியில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவது குறைவடையலாம். ஹரியாணா மாநிலத்தில் அதிகளவு பயிா்க்கழிவுகள் சிா்சா, ஃபதேஹாபாத், கைதால் பகுதிகளில் எரிக்கப்படுகின்றன. இந்த சம்பவங்களை முழுமையாக தடுக்க முடியவில்லை. பயிா்க்கழிவுகள் எரிப்பதை தடுக்கும் பணிகளை முடுக்கியுள்ளோம் என்றாா் அவா்.
தில்லியில் காற்று மாசு மோசமடைந்துள்ள நிலையில், பஞ்சாபில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகா் கூறியிருந்தாா். இது தொடா்பாக கருணேஷ் கா்க் கூறுகையில் ‘தில்லியில் ஏற்படும் காற்று மாசுவுக்கு பஞ்சாபை குற்றம் சாட்டுவது அா்த்தமற்றது. தில்லி காற்று மாசுவில் வெறும் 1 சதவீதமே பஞ்சாபில் பயிரக்கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்படுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி. படகு விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு

பூ பறிக்கும் பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்
பள்ளி ஆசிரியா்கள் நியமன முறைகேடு: மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

