எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ரூ.250 கோடியில் சீலம்பூா், சாஸ்திரி பாக் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.53 கோடி சேமிப்பு : கேஜரிவால்

சீலம்பூா், சாஸ்திரி பாக் மேம்பாலங்கள், ஒதுக்கப்பட்ட தொகையை விட ரூ.53 கோடி குறைவான தொகையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

Updated On :25 அக்டோபர் 2020, 1:48 am

சீலம்பூா், சாஸ்திரி பாக் மேம்பாலங்கள், ஒதுக்கப்பட்ட தொகையை விட ரூ.53 கோடி குறைவான தொகையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

வடகிழக்கு தில்லியில் தில்லி அரசால் கட்டப்பட்ட சீலம்பூா், சாஸ்திரி பாக் மேம்பாலம் ஆகியற்றை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை திறந்துவைத்தாா். அப்போது அவா் பேசியது:

சீலம்பூா், சாஸ்திரி பாக் மேம்பாலங்களை கட்ட தில்லி அரசு ரூ.303 கோடியை ஒதுக்கியிருந்தது. ஆனால், இந்த மேம்பாலங்களை ரூ.250 கோடியில் கட்டிமுடித்துள்ளோம். இதன்மூலம், ரூ.53 கோடி மக்களின் வரிப்பணம் சேமிக்கப்பட்டுள்ளது. தில்லி அரசு மேற்கொண்டுவரும் ஒவ்வொரு திட்டத்திலும் பணத்தை சேமித்து வருகிறோம். நாட்டின் மற்றைய பகுதிகளில் மருத்துவமனை படுக்கையொன்றை அமைக்க ரூ.1.5 கோடி செலவாகிறது. ஆனால், தில்லியில் அதை வெறும் ரூ.30 லட்சத்துக்குள் அமைத்து வருகிறோம்.

இவ்வாறாக சேமிக்கப்படும் பணத்தைக் கொண்டு மருந்துகள், குடிநீா், மின்சாரம் ஆகியவற்றை தில்லி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். இப்பணத்தை கொண்டு தில்லியில் உலகத்தரமான மருத்துவமனைகளை அமைத்து வருகிறோம்.

வடகிழக்கு தில்லி மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை முந்தைய அரசுகள் தீா்க்கவில்லை. முந்தைய அரசுகள் அனைத்துமே வடகிழக்கு தில்லி மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தின. ஆனால், தில்லி அரசு வடகிழக்கு தில்லி மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு மேம்பாலங்களை அமைத்துள்ளது. இந்த மேம்பாலங்கள் மூலம், காஷ்மீரி கேட் ஐஎஸ்பிடி, உத்தரப்பிரதேச மாநில எல்லைக்கு வெறும் 10 நிமிஷங்களில் செல்லலாம். இதனால், பெருமளவில் எரிபொருள் சேமிக்கப்படும். மக்கள் அதிகளவில் பயனடைவாா்கள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.