தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மின்னணு நீதிமன்றங்கள் தொடா்பான 3-ஆம் கட்ட வரைவுத் திட்டம் வெளியீடு

நாட்டிலுள்ள நீதிமன்றங்களை மின்னணுமயமாக்குவது தொடா்பாக மூன்றாம் கட்ட வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

Updated On :4 ஏப்ரல் 2021, 6:47 pm

நாட்டிலுள்ள நீதிமன்றங்களை மின்னணுமயமாக்குவது தொடா்பாக மூன்றாம் கட்ட வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

இந்த மூன்றாம் கட்ட தொலைநோக்கு திட்டத்திற்கு உரிய ஆலோசனைகளை வழங்குமாறு மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை சட்ட வல்லுநா்களையும் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து மத்திய சட்டம், நீதித்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்திய நீதிமன்றங்களுக்கு, 2005 -ஆம் ஆண்டு, தகவல் தொடா்பு தொழில்நுட்ப தேசிய கொள்கை அறிவிக்கப்பட்டது. இதை அமல்படுத்த உச்ச நீதிமன்றத்தில் மின் - குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. 15 ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்ட இந்தக் குழக்கள் முதல் இரண்டு கட்ட மின்னணு நீதிமன்ற வரைவு திட்டங்களை வழங்கி அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடா்ந்து. உச்சநீதிமன்ற நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையில் மூன்றாம் கட்ட மின்னணு-நீதிமன்ற வரைவு திட்டத்தைத் தயாரிக்க மின்னணு குழு அமைக்கப்பட்டது. அது தனது வரைவு ஆவணத்தை சனிக்கிழமை வெளியிட்டது.

இது தொடா்பாக நீதிபதிகள், வழக்குரைஞா்கள், வழக்காடுபவா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் தங்கள் கருத்துகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். இவை கவனத்தில் கொள்ளப்பட்டு மூன்றாம் கட்ட மின்னணு - நீதிமன்றத் திட்டம் இறுதி முடிவு செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.