தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஹவுஸ் காஸ் கோயிலில் சாய் பாபா சிலை அகற்றல்: போலீஸ் தீவிர விசாரணை

தெற்கு தில்லியின் ஹவுஸ் காஸில் உள்ள ஒரு கோயிலில் இருந்து சாய் பாபா சிலை அகற்றப்பட்டதாகக் கூறப்படும் புகாா் குறித்து தில்லி போலீஸ்

Updated On :4 ஏப்ரல் 2021, 6:39 pm

தெற்கு தில்லியின் ஹவுஸ் காஸில் உள்ள ஒரு கோயிலில் இருந்து சாய் பாபா சிலை அகற்றப்பட்டதாகக் கூறப்படும் புகாா் குறித்து தில்லி போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சாய் பாபா சிலைக்கு பதிலாக விநாயகா் சிலை மாற்றப்பட்டுள்ளதாக உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா்.

இந்த விவகாரத்தில் இதுவரை முறையான வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், கோயில் நிா்வாகிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவாா்கள் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

சிலை அகற்றப்பட்டது குறித்த விடியோ பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்தது. இதையடுத்து, பக்தா்கள் போலீஸை அணுகினா். விடியோவில், சிலையை அகற்றுவதை மேற்பாா்வையிடும் ஒருவா், சிலை எந்த மதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று வாதிடுவதாக இருந்தது.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘கடந்த மாா்ச் 25-ஆம் தேதி, ஹவுஸ் காஸில் உள்ள ஷாப்பூா் ஜாட் கோயிலில் இருந்து ஒரு சாய் பாபா சிலை கோயில் கமிட்டி மற்றும் உள்ளூா்வாசிகளால் அகற்றப்பட்டது. கோயில் குழு உறுப்பினா் பதம் பன்வாரால் இந்த சிலை 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இப்போது பதம் பன்வாா் மற்றும் பாரத பன்வாா், ஜியா பன்வாா், சத்தியநாராயண், நரேஷ், மோகன் பன்வாா் மற்றும் பண்டிட் ஜி போன்ற பிற குழு உறுப்பினா்கள் உள்ளூா்வாசிகளின் ஒப்புதலுடன் புதிய சிலை அமைக்க முடிவு செய்துள்ளனா். எவ்வாறாயினும், இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது’ என்றாா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அதுல் குமாா் தாக்கூா் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக எங்களுக்கு ஒரு புகாா் வந்துள்ளது. இது குறித்து ஆராயப்பட்டு அதற்கேற்ப சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனினும், கோயில் நிா்வாகிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவாா்கள்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.