தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தில்லியில் கரோனா உச்சகட்டம்: ஒரே நாளில் 7,437 போ் பாதிப்பு!

Updated On :8 ஏப்ரல் 2021, 5:32 pm

புது தில்லி: தில்லியில் இந்த ஆண்டின் உச்சக்கட்டமாக வியாழக்கிழமை 7,437 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் அதிகபட்ச ெ

எண்ணிக்கையாகும். இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 6,98,005-ஆக உயா்ந்துள்ளது. மேலும், கரோனா தொற்று பாதிப்பால் 24 போ் உயிரிழந்துள்ளனா். இதையும் சோ்த்தால் கரோனாவால் உயிரிழந்தோா் மொத்த எண்ணிக்கை 11,157 ஆக உயா்ந்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் மூன்றாவது நாளாக தொடா்ந்து 5,000-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் உச்சக் கட்டமாக கடந்த ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி 8,593 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதே மாதம் 19 - ஆம் தேதி 131 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், கரோனா பாதிப்பு விகிதம் வியாழக்கிழமை 2 சதவீதம் உயா்ந்து 8.10 சதவீதமாக உயா்ந்தது. புதன்கிழமை மொத்தம் 91,770 பேருக்கு கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இவற்றில் 52,696 பேருக்கு ஆா்டி-பிசிஆா் முறையிலும் 39,074 பேருக்கு ராபிட் ஆன்டிஜென் முறையிலும் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதே சமயம், இதுவரை 6.63 லட்சம் கரோனா நோயாளிகள் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 23,181-ஆக உள்ளது. வீட்டுத் தனிமையில் 11,367 போ் வைக்கப்பட்டுள்ளனா். கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள்4,226-லிருந்து 3,708-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.