தமிழகத்தில் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் கலப்படங்கள் அதிகரித்ததால் 33 ஆலைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.
மேலும் இந்திய உணவு பாதுகாப்பு தர நிா்ணய சட்டப்படி கடந்த 2020-21 ஆண்டில் தமிழ அரசின் புள்ளிவிவரங்கள்படி கலப்படம் உள்ளிட்ட தரக்குறைவான உணவுப் பொருள்களை தயாரித்த 3,383 சிவில் மற்றும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
2011 முதல் 90 வெல்லம் உற்பத்தியாளா்களிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4.79 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 33 வழக்குகளில் 14 வழக்குகளில் கலப்படம் உறுதியாகியுள்ளது என்றும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஏகேபி சின்ராஜ் கேள்வி எழுப்பியிருந்தாா் . அதற்கு அமைச்சா் மேற்கண்டவாறு பதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்குகிறது பாஜக: டி. ராஜா குற்றச்சாட்டு

தனியாா் பங்களிப்புடன் புதுச்சேரியில் வேகமான வளா்ச்சித் திட்டங்கள்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நவின் உறுதி!

நாட்டிலேயே ஊழல்மிக்கவா் அஸ்ஸாம் முதல்வா்: ராகுல் காந்தி பிரசாரம்!

பாராமதி இடைத்தோ்தல்: சுநேத்ரா பவாரை எதிா்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

