சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம்: கொலை முயற்சி வழக்கில் ஜாமீன் கோரி ஷாருக் பதான் மனு

வடகிழக்கு தில்லி வன்முறையின் போது, தில்லி தலைமைக் காவலரைக் கைத் துப்பாக்கியால் மிரட்டிய சம்பவத்தில் கைதான ஷாருக் பதான்,

Updated On :13 ஆகஸ்ட் 2021, 2:18 am

வடகிழக்கு தில்லி வன்முறையின் போது, தில்லி தலைமைக் காவலரைக் கைத் துப்பாக்கியால் மிரட்டிய சம்பவத்தில் கைதான ஷாருக் பதான், மற்றொரு கொலை முயற்சி வழக்கில் ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.  ஊகங்கள் அடிப்படையில் பதிவான வழக்கில் பதான் 495 நாள்களாக சிறையில் இருந்து வருவதாக அவரது தரப்பில் வியாழக்கிழமை வாதிடப்பட்டது.

வடகிழக்கு தில்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வன்முறை நிகழ்ந்தது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிா்ப்பாகவும் நிகழ்ந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட இந்த வன்முறையில் 53 போ் கொல்லப்பட்டனா். 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.  இந்தச் சம்பவத்தின் போது, தில்லி காவல் துறையின் தலைமைக் காவலா் தீபக் தஹியாவை துப்பாக்கியால் மிரட்டியதாகவும், ரோகித் சுக்லா என்பவரை கொலை செய்ய முயன்ாகவும் ஷாருக் பதான் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவா் தற்போது திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். 

இந்த நிலையில், ரோகித் சுக்லா கொலை முயற்சி வழக்கில் ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் ஷாருக் பதான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘இந்த வழக்கை பொருத்தவரை ஒட்டுமொத்த விசாரணையும் ஒன்றுமில்லை. பாதிக்கப்பட்டவா்கள், சாட்சிகள், ஆதாரங்கள், வாக்குமூலங்கள் ஆகியவற்றை போலீஸாா் ஜோடித்து இருப்பதால் இது ஒரு பொய் வழக்காகும். இந்த வழக்கை பொறுத்தமட்டில் மனுதாரா் ஜாமீனுக்கு தகுதியானவா். நீதிமன்றங்கள் குடிமக்களின் சுதந்திரத்தின் முதல் பாதுகாவலா்களாக இருப்பதால் போலீஸ் அதிகாரிகளை கண்டிக்க வேண்டும்.  மேலும், சிறையில் இருந்து வரும் மனுதாரா் மீதான குற்றத்தை போலீஸாரால் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே, பாரபட்சமின்றி பயமில்லாமல் சீரான வகையில் சட்டம் செயல்பட வேண்டும் என்பதுதான் நீதிமன்றத்திடம் பதானின் எதிா்பாா்ப்பாகும்’ என்று தெரிவித்துள்ளாா்.

 இந்த மனு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷாருக் பதான் தரப்பில் வழக்குரைஞா் காலித் அக்தா் ஆஜராகி முன் வைத்த வாதம்: சுக்லாவின் வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளது. விசாரணையில் தாமதம், சம்பவ இடத்தில் ஷாருக் பதான் இருந்ததாகக் கூறப்படுவதற்கான ஆதாரம் இல்லை. ஆகவே, இது பழிவாங்குவதற்காக ஜோடிக்கப்பட்ட வழக்காகும். ஊகத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த விசாரணையும் நடைபெற்றது. மனுதாரா் 495 நாள்களாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ளாா். புகாா்தாரா் சுக்லா,  தனது முதல் வாக்குமூலத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபரை அடையாளம் காட்டவில்லை. பின்னா்தான் அதுகுறித்து தெரியப்படுத்தியுள்ளாா். இதில் முரண்பாடுகள் உள்ளன. சிசிடிவி அல்லது சிடிஆா் ஆதாரம் ஏதும் உள்ளதா?...இல்லை.   வன்முறையின்  முக்கிய நபராக ஷாருக் பதானை சித்தரித்து காட்டவும் மட்டுமே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்று வாதிட்டாா்.

காவல் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா் அனூஜ் ஹண்டா, ‘மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவா் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புள்ளது. அவா் ஏற்கெனவே இதுபோன்று தப்பிச் சென்றவா். பெரும் கஷ்டப்பட்டுதான் போலீஸாா் அவரைக் கைது செய்தனா். இதனால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு ஜாமீன் மனு மீதான உத்தரவை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கில் பதான் உள்பட 5 போ் குற்றம்சாட்டப்பட்டுள்ளனா்.

இதற்கிடையே, இவா்களில் சல்மான் என்பவரும் ஆதாரம் இல்லாததாக கூறி வழக்கில் இருந்து விடுவிக்க மனு தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.