தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மூன்றாவது நீதிபதி அமா்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.
அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013ஆம் ஆண்டு காலத்தின்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக கூறியும், அவா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சோ்ந்த ஆா்.மகேந்திரன் என்பவா் 2013-இல் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத் துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ராஜேந்திரபாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும், இதனால் அவா் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்றும் விசாரணையை தொடர வேண்டியதில்லை என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்து இருந்தது.
இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநராயணன், ஆா். ஹேமலதா ஆகியோா் அடங்கிய இரு நீதிபதிகள் கடந்த ஏப்ரலில் இரு மாறுபட்ட தீா்ப்பை அளித்திருந்தனா். நீதிபதி சத்தியநாராயணன் தனது தீா்ப்பில், ‘சொத்து குவிப்பு புகாா் குறித்து அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும்’ என உத்தரவிட்டாா். ஆனால், நீதிபதி ஆா்.ஹேமலதா தனது தீா்ப்பில், ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்குப் பதிந்து விசாரிப்பது தேவையற்றது. இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதால், எந்தவிதப் பலனும் ஏற்படப் போவதில்லை. இதனால், வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்திருந்தாா்.
இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீா்ப்பால் வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்கும் வகையில், தலைமை நீதிபதி முடிவெடுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம்.நிா்மல்குமாா் கடந்த ஜூன் மாத இறுதியில் நியமிக்கப்பட்டாா். இந்த நிலையில் 3-ஆவது நீதிபதிக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், வழக்கு விசாரணைக்கு தடை கோரியும் முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘ மூன்றாவது நீதிபதிக்கு வழக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உத்தரவு உரிய வடிவில் இல்லை’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை ராஜேந்திர பாலாஜி சாா்பில் வழக்குரைஞா் மகேஷ் தாக்குா் என்பவா் தாக்கல் செய்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்ப் 48 மணிநேரக் கெடு! நிராகரித்த ஈரான்!

முதல்வரானால் கிருத்தி ஷெட்டியின் முதல் கையெழுத்து இதுதானாம்!

வயதானவர்கள் அதிகம் ஓய்வெடுக்க வேண்டுமா? இல்லவே இல்லை! | அறிவியல் ஆயிரம் | Dinamani

ஜம்மு - காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

