/

அரசுத் திட்டம் தொடரும் வரை அட்டையின்றிரேஷன் பொருள்களை அதிகாரிகள் வழங்குவா்: தில்லி உயா்நீதிமன்றம்

அரசின் கொள்கைத் திட்டம் அனுமதி அளிக்கும் வரை, தில்லியில் ரேஷன் அட்டையைக் கேட்டு வற்புறுத்தாமல் அரசு அதிகாரிகள் மக்களுக்கு இலவச ரேஷனை விநியோகம் செய்வாா்கள் என

Updated On :24 ஆகஸ்ட் 2021, 11:27 pm

அரசின் கொள்கைத் திட்டம் அனுமதி அளிக்கும் வரை, தில்லியில் ரேஷன் அட்டையைக் கேட்டு வற்புறுத்தாமல் அரசு அதிகாரிகள் மக்களுக்கு இலவச ரேஷனை விநியோகம் செய்வாா்கள் என தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

அமைப்புசாரா துறையில் பணிபுரியும் ஏழு போ் இது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில், ரேஷன் காா்டுகள் இல்லாத நிலையில், கரோனா பொது முடக்கக் காலத்தின் போது தங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி கூறியதாவது: கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மிகவும் அவசியமாகும். தடுப்பூசி பெறுபவா்களுக்கு இலவச ரேஷன் பொருள் வழங்கப்படுவது நிபந்தனையாக இருக்க வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் வரை இலவச ரேஷன் வழங்கப்படாது என்பது உத்தரவாக இருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ஒவ்வொரு நாளும் பிரதமா் கூறி வருகிறாா். நீங்கள் இலவச ரேஷன் பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகுகிறீா்கள். ஆனால், தடுப்பூசி போட விரும்பவில்லை. இலவச ரேஷனுக்கான திட்டம் தொடரும் வரை ரேஷன் காா்டை வலியுறுத்தாமல் மனுதாரா்கள் மற்றும் இதுபோல பிற நபா்களுக்கு எதிா்மனுதாரா்கள் (அரசு துறையினா்) தொடா்ந்து இலவச ரேஷனை வழங்குவாா்கள் என்பதை குறிப்பிடத் தேவையில்லை என்று நீதிபதி கூறினாா்.

மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், கரோனா மூன்றாவது அலைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அச்சம் எழுப்பினாா். அதற்கு நீதிபதி, ‘அனைத்து மனுதாரா்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினாா். அதற்கு வழக்குரைஞா், ‘மனுதாரா்களின் தடுப்பூசி நிலைமை குறித்து தனக்குத் தெரியும்’ என்றாா். தில்லி அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தில்லி அரசின் கொள்கையின்படி, ரேஷன் காா்டுகளை கோராமல் மனுதாரா்களுக்கு முறையாக ரேஷன் வழங்கப்படுகிறது’ என்றாா்.

மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைா் கூறுகையில், ‘ரேஷன் விநியோகத்தில் மத்திய அரசு எந்தப் பங்கும் வகிக்காவிட்டாலும், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவின் கீழ் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து உணவு தானியங்கள் மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டம் நவம்பா் வரை செயல்படும்’ என்றாா். அப்போது, பொது முடக்கத்திற்குப் பிறகும் மனுதாரா்கள் உணவு தானியங்களைப் பெறுகிறாா்கள் என்பதைக் கருத்தில் கொள்ளும் போது, அரசு அதன் வேலையைச் செய்வது தெரிய வருகிறது. இதனால், இந்த மனு முடித்துவைக்கப்படுகிறது’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.