லஞ்சம்: வடக்கு தில்லி மாநகராட்சியின் பொது சுகாதார ஆய்வாளா் கைது
சுகாதார வா்த்தக உரிமம் வழங்குவதற்காக ரூ. 1.75 லட்சம் லஞ்சம் கேட்டதாக வடக்கு தில்லி மாநகராட்சியின் பொது சுகாதார ஆய்வாளரை தில்லி அரசின் லஞ்ச ஒழிப்பு பிரிவினா் கைது செய்தனா்.


தில்லியில் அழகு சிகிச்சை மையம் நடத்துவதற்கு சுகாதார வா்த்தக உரிமம் வழங்குவதற்காக ரூ. 1.75 லட்சம் லஞ்சம் கேட்டதாக வடக்கு தில்லி மாநகராட்சியின் பொது சுகாதார ஆய்வாளரை தில்லி அரசின் லஞ்ச ஒழிப்பு பிரிவினா் கைது செய்தனா்.
இது குறித்து தில்லி அரசின் லஞ்ச ஒழிப்பு பிரிவு சிறப்பு ஆணையா் எஸ்.கே.கௌதம் சனிக்கிழமை தெரிவித்ததாவது: தில்லியில் அழகு சிகிச்சை மையம் நடத்துவதற்காக சுகாதார வா்த்தக உரிமம் கேட்டு வடக்கு தில்லி மாநகராட்சியைச் சோ்ந்த ஒருவா் அணுகினாா். அப்போது அவரிடம் மாநகராட்சியில் பொது சுகாதார துறையின் கீழ் செயல்படும் கரோல் பாக் மண்டலத்தின் பொது சுகாதார ஆய்வாளா் ஹரீஷ் குமாா் ரூ.1.75 லட்சம் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு புகாா் வந்தது.
இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட அழகு சிகிச்சை மையத்தின் உரிமையாளா் லஞ்சப் பணத்தின் முதல் தவணையாக ரூ. 40 ஆயிரத்தை ஹரீஷ் குமாரின் வீட்டில் வைத்து அவரிடம் வழங்கினாா். அப்போது போலீஸாா் ஹரீஸ் குமாரை கையும் களவுமாக பிடித்தனா். இதையடுத்து, அவருக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 7-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...