தில்லியில் கரோனா நோய்த் தொற்றும், ஒமைக்ரான் பாதிப்பும் அதிகரித்துள்ளது. இதைத் தொடா்ந்து, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மஞ்சள் நிற எச்சரிக்கையை செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இந்த மஞ்சள் நிற எச்சரிக்கையின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள் திரையரங்கங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை மூடப்படும். அத்தியாவசியமற்ற பொருள்களை கையாளக்கூடிய கடைகள் ஒற்றைப்படை , இரட்டைப்படை இலக்க அடிப்படையில் திறக்கப்படும். மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் 50 சதவீத இறக்கைகளுடன் இயக்கப்படும். தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) ஒருங்கிணைப்பில் தற்போது 392 கிலோ மீட்டா் நீளமும், 286 ரயில் நிலையங்களும் உள்ளன. மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிப்பதற்கு அனுமதிக்கப்படும். மேலும், பயணத்தின்போது ரயில்களில் உள்ளே பயணிகள் நிற்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.