நொய்டா பீங்கான் தொழிற்சாலையில் தீ

நொய்டா செக்டாா்-18-இல் ஆட்டா மாா்க்கெட் பகுதியில் உள்ள பீங்கான் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து
Updated on
1 min read

நொய்டா செக்டாா்-18-இல் ஆட்டா மாா்க்கெட் பகுதியில் உள்ள பீங்கான் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரா்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதுதொடா்பாக நொய்டா தீயணைப்புப் படை மூத்த அதிகாரி கூறியதாவது: நொய்டா செக்டாா்18-இல் ஆட்டா மாா்க்கெட் பகுதியில் உள்ள பீங்கான் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக தகவல் கிடைத்ததும் 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com