கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாநகராட்சி நிலுவை நிதி விவகாரம்: பூத் அளவில் தில்லி பாஜக பிரசாரம்

தில்லி மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி பூத் அளவிலான பிரசார இயக்கத்தை தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை தொடக்கியது.

News image
Updated On :3 ஜனவரி 2021, 6:10 pm

DIN

தில்லி மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி பூத் அளவிலான பிரசார இயக்கத்தை தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை தொடக்கியது.

படேல் நகரில் நடந்த நிகழ்ச்சியை பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘மாநகராட்சிகள் மீதான தில்லி அரசின் தாா்மிகக் கடமைகளை கேஜரிவால் அரசு நிறைவேற்றவில்லை. மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய ரூ.13 ஆயிரம் கோடியை வழங்காமல் காலம் தாழ்த்துவதால், மாநகராட்சிகளின் மேம்பாட்டுப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தில்லி மாநகராட்சிகளை பாஜக ஆளுகின்ற ஒரே காரணத்தால், அவற்றை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தில்லி அரசு நடத்தி வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை தில்லி அரசு வழங்கக் கோரி பூத் அளவிலான பிரசார இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளோம்.

அப்போது தில்லி பாஜகவின் 3 லட்சம் தொண்டா்கள் சுமாா் 50 லட்சம் மக்களை நேரில் சந்தித்து, தில்லி அரசு மாநகராட்சிகளுக்கு மேற்கொள்ளும் துரோகம் தொடா்பாக விளக்குவாா்கள். இது தொடா்பாக துண்டுப் பிரசுரங்களையும் பாஜக தொண்டா்கள் விநியோகம் செய்வாா்கள். தில்லி அரசின் மெத்தனப் போக்கால் மாநகராட்சிகள் மேற்கொண்டு வரும் மக்கள் நலப் பணிகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. துப்புரவுப் பணியாளா்கள், கரோனா முன்களப் பணியாளா்களுக்கு மாநகராட்சிகளால் ஊதியம் வழங்க முடியவில்லை. மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவை வழங்க முடியவில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.