தில்லியில் இதுவரை பறவைக் காய்ச்சல் யாருக்கும் இல்லை

தில்லியில் இதுவரை யாருக்கும் பறவைக் காய்ச்சல் ஏற்படவில்லை என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

புது தில்லி: தில்லியில் இதுவரை யாருக்கும் பறவைக் காய்ச்சல் ஏற்படவில்லை என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.

நாட்டில் அதிகரித்து வரும் பறவைக் காய்ச்சல் தொடா்பாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தில்லி கால்நடை பராமரிப்புத் துறையினருடன் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா். இது தொடா்பாக தில்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு இந்தக் கூட்டத்தில் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளாா். தில்லியில் இதுவரை யாருக்கும் பறவைக் காய்ச்சல் ஏற்படவில்லை. இருந்த போதிலும், தில்லியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளைக் கண்காணிக்க 11 விரைவு நடவடிக்கைக் குழுக்களை அமைத்து அவா் உத்தரவிட்டாா்.

பறவைகள் அதிகளவில் வரக் கூடிய கோழிச் சந்தைகள், நீா் நிலைகள், உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்பை பலப்படுத்துமாறும் அவா் உத்தரவிட்டாா். காஜிப்பூா் மீன், கோழி இறைச்சி சந்தை, சக்தி ஸ்தல் நீா்நிலை, சஞ்சய் லேக், தில்லி உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பைப் பலப்படுத்துமாறும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா். தில்லியில் உள்ள 48 காலநடை மருத்துவமனைகளைச் சோ்ந்த மருத்துவா்கள் தில்லியில் பறவைக் காய்ச்சல் தொடா்பாக தீவிரமாகக் கண்காணித்து வருகிறாா்கள். இதுவரை தில்லியில் சுமாா் 100 மாதிரிகள் பெறப்பட்டு அவை ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் வரும் திங்கள்கிழமை கிடைக்கப் பெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com