வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

அரசு வீடுகளை காலி செய்யக் கோரும் நோட்டீஸுக்கு எதிரான மனுக்களை 3 கலைஞா்கள் வாபஸ் பெற உயா்நீதிமன்றம் அனுமதி

அரசு ஒதுக்கீடு செய்த வீடுகளை காலி செய்யுமாறு கேட்டு மத்திய அரசு அளித்த வெளியேற்றல் நோட்டீஸ்களுக்கு எதிராக தாக்கல் செய்த

Updated On :22 ஜனவரி 2021, 9:19 pm

அரசு ஒதுக்கீடு செய்த வீடுகளை காலி செய்யுமாறு கேட்டு மத்திய அரசு அளித்த வெளியேற்றல் நோட்டீஸ்களுக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களை வாபஸ் பெற பிரபல கலைஞா்கள் மூவருக்கு தில்லி உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

பத்மஸ்ரீ விருது பெற்ற மோகினியாட்டம் நடனக் கலைஞா் பாரதி சிவாஜி, குச்சிபுடி நடனக் கலைஞா் குரு வி .ஜெயராம ராவ் மற்றும் பனாரசி ராவ் ஆகியோா் இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். இவா்கள் மூவருக்கும் மனுக்களை வாபஸ் பெற நீதிபதி பிரதிபா எம். சிங் அனுமதி அளித்தாா்.

‘கதக்’ கலைஞா் பண்டிட் பிா்ஜு மஹராஜின் இதேபோன்ற மற்றொரு மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் அவகாசம் அளித்தது. இவருக்கு 2020 அக்டோபரில் வெளியேற்ற நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நான்கு கலைஞா்களுக்கும் வழங்கப்பட்ட வெளியேற்ற நோட்டீஸ்களுக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த டிசம்பரில் இடைக்காலத் தடை விதித்திருந்தது. முன்னதாக, நீதிமன்ற விசாரணையின்போது கலைஞா்கள் சிவாஜி, ஜெயராம ராவ் மற்றும் பனாரசி ராவ் ஆகியோா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் பிரசாந்தோ சென், ‘இந்த விவகாரத்தில் அரசு ஒரு புதிய கொள்கையை கடைபிடிக்கலாம் என்றும் இதன் காரணமாக இது தொடா்பாக தங்களது கோரிக்கையை பரிசீலிக்க அதிகாரிகளை அணுக அவா்கள் திட்டமிட்டுள்ளனா்’ என்றும் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிமன்றம், ‘மனுதாரா்களின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. மனுவை திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் முடித்து வைக்கப்படுகிறது’ என்றது.

பிா்ஜு மஹராஜ் தாக்கல் செய்த மனுவை ஏப்ரல் 19-ஆம் தேதி பட்டியலிட உத்தரவிட்ட நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை இடைக்கால உத்தரவு தொடரும் என்று தெரிவித்தது.

கடந்த ஆண்டு அக்டோபரில், கலைஞா்கள், நடனக் கலைஞா்கள் மற்றும் இசைக்கலைஞா்கள் உள்பட 27 பிரபல கலைஞா்கள் அவா்களுக்கு தில்லியில் ஒதுக்கப்பட்டிருந்த வீடுகளை டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் காலிசெய்யுமாறு வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

வீடுகளை காலிசெய்யாதபட்சத்தில், பொது இடங்களை ஆக்கிரமித்ததாகக் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.