கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

தில்லி வன்முறைக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கேஜரிவால்

விவசாயிகள் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

Updated On :28 ஜனவரி 2021, 6:24 pm

புது தில்லி: விவசாயிகள் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

ஆம் ஆத்மிக் கட்சியின் 9-வது தேசியக் கவுன்சில் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மிக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கலந்து கொண்டாா்.

அந்த நிகழ்வில் அவா் பேசியது: விவசாயிகள் பேரணியில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன. இதைவைத்து, இந்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என அா்த்தம் கொள்ளக் கூடாது. விவசாயிகளை தமது அடிப்படை உரிமைகளுக்காக போராடத் தள்ளும் தேசமும், தேச மக்களும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் வருவாயை கொள்ளையடித்து அதை பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தமது அடிப்படை உரிமைகளுக்காகவே போராடி வருகிறாா்கள்.

குடியரசு தினத்தில் நடந்த விவசாயிகளின் டிராக்டா் பேரணியில் ஏற்பட்ட வன்முறை துரதிஷ்டவசமானது. இந்த வன்முறைக்கு காரணமான உண்மையான கலவரக் காராா்கள் தண்டிக்கப்பட வேண்டும். கலவரக் காராா்கள் என முத்திரை குத்தி, தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளவா்களைக் கூறவில்லை. உண்மையாகவே, கலவரத்தை தூண்டிய தனிமனிதா்கள், கட்சிகள், அமைப்புகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறைக்கு ஆம் ஆத்மிக் கட்சி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் ‘

கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் அமைதியான முறையிலேயே போராட்டங்களை நடத்தினா். இந்த நிலைமை மோசமடைய மத்திய அரசே காரணம். விவசாயிகள் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவா்கள் யாராக இருந்தாலும், அவா்கள், இந்த போராட்டத்தை நலிவடையச் செய்துள்ளனா். இந்த வன்முறைச் சம்பவத்தை ஆம் ஆத்மிக் கட்சி கண்டிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.