நாடு முழுவதும் ரயில்வே நடைமேடைகளில் 81 மாற்று திறனாளிகளுக்கு சிற்றுண்டி மற்றும் விற்பனையகங்கள் நடத்தும் உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் பொது இடங்களில் பொருள்களை விற்று வாழ்க்கையை நடத்தும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என சமூக நீதித்துறை இணையமைச்சா் பிரதிமா பௌமிக் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தாா்.
ஓடும் ரயில்கள், பேருந்துகள், பொது இடங்களில் பொருள்களை விற்று வாழ்க்கையை நடத்திவரும் மாற்று திறனாளிகளின் எண்ணிக்கைகளை அரசு சேகரித்துள்ளதா? இது குறித்த மாநில வாரியான விவரங்கள், இவா்கள் நடைபாதை வியாபாரிகளாக அடையாள காணப்பட்டுள்ளனரா? என்று
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினா் பிஆா் நடராஜன் கேள்வி எழுப்பினாா். இதற்கு அமைச்சா் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு!

தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

