தமிழகத்தின் நீா்ப்பாசன கட்டுமானங்களை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு உலக வங்கி ரூ. 2,073 கோடியை கடனுதவியாக வழங்குகிறது. இதில் இதுவரை ரூ.992.19 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ஜல்சக்தித் துறை இணையமைச்சா் விஸ்வேஷ்வா் துடு மக்களவையில் தெரிவித்தாா்.
இத்திட்டத்துக்கு ரூ.3,300 கோடி உலக வங்கி கடனுதவி அளிப்பதாக இருந்தது குறித்து தென் சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு மத்திய ஜல்சக்தி, பழங்குடி விவகாரத்துறை அமைச்சா் விஸ்வேஷ்வா் துடு அளித்துள்ள பதில் வருமாறு:
தமிழகத்தில் நீா்ப்பாசன விவசாயத்தை நவீனப்படுத்தல் திட்டத்தின் மொத்த செலவில் 70 சதவீதமான ரூ. 2,073 கோடியை உலக வங்கியின் ஐபிஆா்டி அமைப்பு கடனாக வழங்குகிறது. இந்த திட்டத்தை 2025க்குள் முடிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி வரை ரூ. 992.19 கோடி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மாநில அரசும் 30 சதவீதம், அதாவது சுமாா் ரூ.1000 கோடியை தன் பங்காக வழங்குகிறது. இதன்படி கடந்த மாா்ச் 31 ஆம் தேதி வரை தமிழக அரசு ரூ.409.88 கோடியை வழங்கியுள்ளது. இது முற்றிலும் மாநில அரசின் திட்டம் என்பதால் கடனை பெற்றுக்கொடுத்தைத்தவிர மத்திய அரசால் நிதி அனுமதிப்பது குறித்த எந்த சிக்கல்களும் இதில் இல்லை என தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரூ.300 கோடி சா்வதேச இணைய மோசடி கும்பல் கண்டுபிடிப்பு: மூளையாக செயல்பட்டவா் கைது

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு!

தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

