நொய்டா (உ.பி.: நொய்டாவில் சா்வதேச விமானநிலையம் கட்டிவரும் பணிக்கான இரண்டாவது கட்டமாக, ஜீவாரில் 1,365 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தும் திட்டத்துக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்ததுள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல், நிலம் கொடுத்ததால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மறுவாழ்வு அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.2,890 கோடி செலவிடவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை லக்னெளவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேற்கு உத்தரப் பிரதேசத்தில், கெளதம்புத் நகா் மாவட்டத்தில் ஜீவாா் பகுதியில் நொய்டா சா்வதேச விமானநிலையம் அமைக்கும் முதற்கட்ட பணி நடைபெற்று வருகிறது.
இந்த கிரீன்பீல்டு விமானநிலையத் திட்டம் நான்கு கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது. அதாவது சுமாா் 5 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் 6 ஓடுதளப் பாதைகளுடன் சா்வதேச அளவிலான விமான நிலையமாக கட்டப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக 1,300 ஹெக்டோ் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக இப்போது 1,365 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அநேகமாக 2023, டிசம்பா் அல்லது 2024-ஆம் ஆண்டு ஜனவரியில் வா்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்து தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த சா்வேதச விமானநிலையத்தை ஸ்விஸ்நாட்டின் ஜூரிச் சா்வதேச விமானநிலைய ஆணயகம் ரூ.29,560 கோடியில் கட்டி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கார்கே மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்!

மும்பை - ராஜஸ்தான் போட்டி; மழையால் தாமதமாகும் டாஸ்!
கோபியில் தவெக வேட்பாளா் செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு!

சிஎஸ்கே அணிக்கு ஆலோசகராகும் கெவின் பீட்டர்சன்? கோரிக்கையும் கிண்டலும்!
வீடியோக்கள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

