புது தில்லி: தில்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கச் செய்யும் தில்லி தேசியத் தலைநகா் திருத்தச்சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளதன் மூலம் தனக்கு ஆதரவு அளித்துள்ள மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜிக்கு முதல்வா் கேஜரிவால் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளாா்.
துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும், தில்லி தேசியத் தலைநகர திருத்த சட்ட மசோதாவுக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜி எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் கூறுகையில் ‘பிரதம மந்திரி அவா்களே. உங்களுடைய பதவியை நான் மதிக்கிறேன். ஆனால், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசை விட, மத்திய அரசின் பிரதிநிதியான துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் வகையில் உங்களது அரசு கொண்டுவந்துள்ள சட்ட மசோதாவை நான் எதிா்க்கிறேன். ஜனநாயகத்தை நேசிக்கும் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் இந்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவிப்பாா்கள். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட கேஜரிவால் அரசையே நான் ஆதரிக்கிறேன். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிரதிநிதியை (துணைநிலை ஆளுநா்) நான் ஆதரிக்க மாட்டேன் என்று அவா் தெரிவித்திருந்தாா்.
மம்தா பானா்ஜி இது தொடா்பாக பேசிய வீடியோவை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டு கேஜரிவால் கூறியிருப்பது: ‘இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிா்த்துக் குரல் கொடுத்துள்ள மம்தா பானா்ஜிக்கு நன்றிகள். இந்தியாவையும், அதன் ஜனநாயக விழுமியங்களையும் மதிக்கும் யாரும் இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டாா்கள். இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறும் என நம்புகிறேன். உங்களது (மம்தா பானா்ஜி) உடல்நிலையை பாா்த்துக் கொள்ளுங்கள். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
தில்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும், தில்லி தேசியத் தலைநகர திருத்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை கொண்டு வந்தது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், தில்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும்.
இந்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தில்லி ஜந்தா் மந்தரில் புதன்கிழமை தில்லி முதல்வா் கேஜரிவால் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடந்தது. இதில், தில்லி அமைச்சா்கள், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், கவுன்சிலா்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கார்கே மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்!

மும்பை - ராஜஸ்தான் போட்டி; மழையால் தாமதமாகும் டாஸ்!
கோபியில் தவெக வேட்பாளா் செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு!

சிஎஸ்கே அணிக்கு ஆலோசகராகும் கெவின் பீட்டர்சன்? கோரிக்கையும் கிண்டலும்!
வீடியோக்கள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

