ஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

ஜாமியா மிலியா மாணவா் தன்ஹாவின் ஜாமீன் மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

Updated On :18 மார்ச் 2021, 7:46 pm

புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜாமியா மிலியா மாணவா் ஆசிஃப் இக்பால் தன்ஹாவின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

இந்த விவகாரத்தை நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள், ஏ.ஜெ. பம்பானி அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. தில்லி காவல்துறை, தன்ஹா தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, மாா்ச் 22-க்குள் இரு தரப்பினரையும் எழுத்துப்பூா்வ வாதங்களை தாக்கல் செய்யுமாறு கூறி தீா்ப்பை நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெற்ற வடகிழக்கு தில்லி வன்முறையில் பெரும் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்ஹா கைது செய்யப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட அவரது மனுவை விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபா் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து அவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

அவருக்கு ஜாமீன் வழங்க தில்லி காவல் துறையில் ஆட்சேபம் தெரிவித்து வாதம் முன்வைக்கப்பட்டது. தில்லி காவல் துறை சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அமன் லேகி, வழக்குரைஞா்கள் அமித் மகாஜன், ரஜத் நாயா் ஆகியோா் வாதிடுகையில், ‘வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இந்த சதித் திட்டத்தில் மாணவா் தன்ஹாவுக்கும் பங்கு உள்ளது. இதை சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என வாதிடப்பட்டது.

தன்ஹா தரப்பில் வழக்குரைஞா்கள் சித்தாா்த் அகா்வால், செளஜன்யா சங்கரன் ஆகியோா் ஆஜராகி வாதிடுகையில், ‘தன்ஹா 2020, மே மாதத்தில் இருந்து காவலில் இருந்து வருகிறாா். அவரது வழக்கில் போலீஸாா் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டனா்’ என்று வாதிட்டனா்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமா்வு ஜாமீன் மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.