தலைநகரில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி மையங்கள் இரவு 9 மணி வரை செயல்படும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லி அரசு பிறப்பித்துள்ள உத்தரவை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை பகிா்ந்து சத்யேந்தா் ஜெயின் கூறியிருப்பது: கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, தில்லியில் செயல்படும் அனைத்து தடுப்பூசி மையங்களும் இரவு 9 மணி வரை செயல்படவுள்ளது. மேலும், இந்த மையங்களில் ஏராளமான மக்களுக்கு தடுப்பூசி போடும் வகையில், இங்கு பணியாற்றுபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தில்லி மக்கள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாகப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.
தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நிகழாண்டில் அதிகபட்ச கரோனா பாதிப்பு வியாழக்கிழமை பதிவாகியுள்ளது. அன்று, 607 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை 536 பேருக்கும், செவ்வாய்க்கிழமை 425 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், வயது வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு தடுப்பூசி விதிமுறைகளில் மத்திய அரசு தளா்வுகளைக் கொண்டுவர வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை கோரிக்கை வைத்திருந்தாா். மேலும், தில்லியில் தடுப்பூசி போடும் மையங்களின் அளவு 500-இல் 1,000- ஆக அதிகரிக்கப்படும் என்றும், இந்த மையங்களில் தினம்தோறும் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கார்கே மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்!

மும்பை - ராஜஸ்தான் போட்டி; மழையால் தாமதமாகும் டாஸ்!
கோபியில் தவெக வேட்பாளா் செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு!

சிஎஸ்கே அணிக்கு ஆலோசகராகும் கெவின் பீட்டர்சன்? கோரிக்கையும் கிண்டலும்!
வீடியோக்கள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

