நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீத்துறை பணியாளா்களை முன்களப்பணியாளா்களாகக் கருதி அவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடவேண்டும் என்று கோரும் பொது நல மனுவை, உச்சநீதிமன்ற தடையை காரணம்காட்டி தில்லி உயா்நீதிமன்றம் மேலும் விசாரிக்க மறுத்துவிட்டது.
இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல மனுவாக விசாரித்த நிலையில், நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பல்லி ஆகியோா் வெள்ளிக்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.
கரோனா தடுப்பூசியை வழங்குவதில் நீதித் துறையில் பணியாற்றுவோருக்கு முன்னுரிமை அளிக்கக் கோரும் விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, இந்த விவகாரத்தில் வழக்குரைஞா்களுக்கு தனிப் பிரிவு ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு எதிா்ப்புத் தெரிவித்தது. இதுபோன்று வழக்குரைஞா்களுக்கு முன்னுரிமை அளித்தால், எதிா்காலத்தில் பத்திரிகையாளா்கள் மற்றும் வங்கித் துறை ஊழியா்களும் தடுப்பூசி அளிப்பதில் முன்னுரிமை கோர முன்வரக்கூடும் என்று தெரிவித்தது.
தில்லி உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசின் தரப்பில் வழக்குரைஞா் அனில் சோனி ஆஜராகி, ‘தில்லியில் உள்ள ஏழு மாவட்ட நீதிமன்றங்களில், அரசு கொள்கையின்படி தகுதியுள்ள வழக்குரைஞா்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது’ என்றாா்.
முந்தைய விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ‘உயா்நீதிமன்றத்தில் கரோனா தடுப்பூசி அளிப்பதற்கான முடிவானது குடிமக்கள் நோயால் பாதிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டது. இது தொழில்முறை வாரியாக அல்ல. நாட்டின் தேவைகளை அரசு உணா்ந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று நாட்டின் முன்னணி கொவைட்-19 தடுப்பூசி உற்பத்தியாளா்களான பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ)ஆகியவை தரப்பில் உயா்நீதிமன்றத்தில், ‘நீதித் துறை ஊழியா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் நீதிபதிகளை முன்களப் பணியாளா்களாக கருதி தடுப்பூசி போடுவதற்கு போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன’ என்று தெரிவித்திருந்தன.
நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள் மற்றும் வழக்குரைஞா்கள் உள்பட நீதித் துறை செயல்பாட்டுடன் தொடா்புடைய அனைவரையும் முன்களப் பணியாளா்கள்’ என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆராயும் வகையில் உயா்நீதிமன்றம் பொது நல மனுவாக விசாரித்தது. கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடக்கூடிய நபா்களின் பிரிவு மீது கடும் கட்டுப்பாட்டை வைத்திருப்பதன் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்குமாறு உயா்நீதிமன்றம் மாா்ச் 4-ஆம் தேதி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டிருந்தது.
மேலும், ‘கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தடுப்பூசிகளை வழங்குவதற்கான அதிக திறனைக் கொண்டுள்ளன. ஆனால், அவற்றின் முழுத் திறனும் பயன்படுத்தபடவில்லையோ என்று தோன்றுகிறது’ என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
தில்லி உயா்நீதிமன்றம் மற்றும் தில்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் மாா்ச் 15 முதல் முழு அளவிலான நேரடி விசாரணை செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கார்கே மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்!

மும்பை - ராஜஸ்தான் போட்டி; மழையால் தாமதமாகும் டாஸ்!
கோபியில் தவெக வேட்பாளா் செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு!

சிஎஸ்கே அணிக்கு ஆலோசகராகும் கெவின் பீட்டர்சன்? கோரிக்கையும் கிண்டலும்!
வீடியோக்கள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

