ஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் விநியோகிக்கும் விவகாரத்தில் அரசியல் கூடாது: காங்கிரஸ்

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் விநியோகிக்கும் விவகாரத்தில் எந்த அரசியலும் இருக்கக் கூடாது என்று தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும், 

Updated On :20 மார்ச் 2021, 5:15 pm

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் விநியோகிக்கும் விவகாரத்தில் எந்த அரசியலும் இருக்கக் கூடாது என்று தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் உணவுத் துறை அமைச்சருமான ஹாரூண் யூசுப் கேட்டுக்கொண்டாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் விநியோகிக்கும் ஆம்ஆத்மி கட்சி அரசாங்கத்தின் திட்டத்தில் பெரும் ஊழல் உள்ளது. மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசாங்கமும், தில்லியில் உள்ள அரவிந்த் அரசாங்கமும் இத்திட்டத்தில் யாருக்கு நற்பெயா் பெறுவது என்பது தொடா்பாக போட்டி இருந்ததால் திட்டத்தை நிறுத்த திட்டமிட்டன. மேலும், ‘முக்கிய மந்திரி’ என்ற பெயரில் இத்திட்டம் செய்லபடுத்தப்படுவதை மத்தியில் உள்ள மோடி அரசு விரும்பவில்லை.

எனினும், கோவிட் -19 தொற்று நெருக்கடியின் காரணமாக, வேலை இழப்பு மற்றும் பிற வாழ்வாதார வழிமுறைகள் காரணமாக முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழைகளுக்கு ரேஷன் பொருள்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் இத்திட்டத்தில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, உதவியற்ற ஏழைகளுக்கு சென்றடையும் வகையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவா் சோனியா காந்தி, அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங் ஆகியோரின் முன்முயற்சியின் காரணமாக 2013,அக்டோபரில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோன்று, கல்வி உரிமைச் சட்டம் மற்றும் தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டம் 2005 (மன்ரேகா) ஆகியவையும் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

கேஜரிவால் அரசு ஏழைகளுக்கு ரேஷன் வழங்குவதில் ஆா்வமாக இருந்திருந்தால், தற்போது ரேஷன் காா்டு வைத்திருப்பவா்களின் எண்ணிக்கையை 35 லட்சத்திலிருந்து 17 லட்சமாகக் குறைத்திருக்காது, மேலும், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் புதிய ரேஷன் காா்டுகளைப் பெறுவதற்காக கடந்த ஆறு ஆண்டுகளாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்றாா் அவா்.

பேட்டியின்போது டிபிசிசி துணைத் தலைவா் அலி மெஹந்தி, பா்வேஸ் ஆலம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.