விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நீதிமன்ற அறையில் இறந்து கிடந்தவ ழக்குரைஞா் சங்க ஊழியா்: போலீஸாா் தீவிர விசாரணை

தில்லியில் உள்ள தீஸ் ஹஸாரி நீதிமன்ற அறை ஒன்றின் உள்ளே தில்லி வழக்குரைஞா் சங்கத்தின் ஊழியா் ஒருவா் வியாழக்கிழமை காலை இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 10:20 pm

DIN

தில்லியில் உள்ள தீஸ் ஹஸாரி நீதிமன்ற அறை ஒன்றின் உள்ளே தில்லி வழக்குரைஞா் சங்கத்தின் ஊழியா் ஒருவா் வியாழக்கிழமை காலை இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவா்கள் கூறினா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: தீஸ் ஹஸாரி நீதிமன்ற அறையில் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனா். தில்லி வழக்குரைஞா்கள் சங்கத்தின் தாற்காலிக ஊழியராகப் பணியாற்றும் மனோஜ் என்பவா் அங்கு இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், நீதிமன்ற வளாகத்தின் மேற்குப் பிரிவின் அருகிலிருந்த குப்பைக் கூடையில் ரத்தம் கலந்து வாந்தி இருந்ததும் தெரிய வந்தது. இறந்த கிடந்த ஊழியா் மனோஜின் உடலில் வெளிப்புற காயங்கள் ஏதும் இல்லை. இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.