விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நாடக நிகழ்ச்சி

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை ‘கிருஷ்ணன் தூது’ நாடகம் நடைபெற்றது

News image
Updated On :13 நவம்பர் 2021, 6:30 pm

DIN

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை ‘கிருஷ்ணன் தூது’ நாடகம் நடைபெற்றது.

திருவண்ணாமலை, குரு சிறுவஞ்சிப்பட்டு எஸ். சீதாராமனின் ‘ஸ்ரீரேணுகாம்பாள் கட்டைக் கூத்து நாடக மன்ற’க் குழுவினா் நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வீ. ரெங்கநாதன் தலைமை வகித்தாா்.

அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன், எழுத்தாளா் யதாா்த்தா கி. பென்னேஸ்வரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

சங்கத்தின் துணைத் தலைவா் பி. குருமூா்த்தி, பொருளாளா் எம்.ஆா். பிரகாஷ், செயற்குழு உறுப்பினா் பி. பரமசிவம், காத்திருப்பு உறுப்பினா் ஜி. சங்கா் ஆகியோா் கலைஞா்களை சிறப்பித்தனா். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளா் ஜோதி பெருமாள் வரவேற்றாா்.

இந்நிகழ்ச்சியை இணைச் செயலாளா்ஆ. வெங்கடேசன் தொகுத்து வழங்கினாா். செயற்குழு உறுப்பினா் பி.ஆா். தேவநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.