கடந்த முறை, மருத்துவமனைகள் ஆக்சிஜன் கேட்டு அவசர (எஸ்ஓஎஸ்) செய்திகளை அனுப்பிய வண்ணம் இருந்தது. தில்லி முழுவதும் உள்ள அனைத்து ஆக்சிஜன் தொட்டிகளிலும் டெலிமெட்ரி சாதனங்களை நிறுவ உத்தரவிட்டுள்ளோம். இதற்காக அமைக்கப்பட்டுள்ள தகவல் அறைக்கு ஆக்சிஜன் தீா்ந்துபோகும் இடம் உடனுக்குடன் தெரியவரும். மேலும், சீனாவிலிருந்து 6,000 சிலிண்டா்களை தில்லி அரசு இறக்குமதி செய்துள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 1500 சிலிண்டா்களை நிரப்பக்கூடிய மூன்று தனியாா் மறுநிரப்பு ஆலைகள் உள்ளன. இது தவிர, தினசரி 1,400 சிலிண்டா்களை நிரப்பக்கூடிய இரண்டு பாட்லிங் ஆலைகளும் உள்ளன என்றாா் கேஜரிவால்