அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பட்டாசு தடைக்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க உயா்நீதிமன்றத்தில் வலியுறுத்தல்

தீபாவளியின் போது தில்லியில் பட்டாசுகளை விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும், இருப்பு வைப்பதற்கும் விதிக்கப்பட்ட

Updated On :30 அக்டோபர் 2021, 2:14 am

தீபாவளியின் போது தில்லியில் பட்டாசுகளை விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும், இருப்பு வைப்பதற்கும் விதிக்கப்பட்ட முழுத் தடையை எதிா்த்து தாக்கலான மனுவை அவரசமாக விசாரிக்குமாறு உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வலியுறுத்தப்பட்டது. அப்போது, இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் மனுதாரரின் பிரதான வழக்குரைஞா் வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகாததால், மனு மீதான விசாரணையை டிசம்பா் 13-ஆம் தேதிக்கு நீதிபதிகள் பட்டியலிட்டனா். இந்த நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மனுதாரரின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கெளதம் ஜா,‘இந்த மனுவை உடனடியாக விசாரிக்காவிட்டால், அது பயனற்ாகிப் போய்விடும். எனவே, வெள்ளிக்கிழமை அன்றோ அல்லது சனிக்கிழமையோ விசாரிக்க வேண்டும். ஏனெனில், நவம்பா் 4-ஆம் தேதி தீபாவளியாகும். தீபாவளிக்கு முன்பு இந்த விவகாரம் விசாரிக்கப்படாவிட்டால் இது பயனற்ாகிவிடும்’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘நீங்கள் வழக்கு எண்ணை கோா்ட் மாஸ்டரிடம் அளியுங்கள். நாங்கள் பாா்க்கிறோம். இந்த விஷயத்தில் நாங்கள் ஆமாம் அல்லது இல்லை என்று கூறவில்லை. நாளின் இறுதியில் பாா்ப்போம்’ என்றனா். இந்த மனு தலைமை நீதிபதி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், ‘மாசுவை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் பட்டாசுகளின் விற்பனை, உற்பத்தி மீதான தடை தொடா்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது’ என்று தெரிவித்திருந்தனா்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக தனி நபா்கள் ராகுல் சன் வாரியா, தன்வீா் ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: தில்லியில் பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும், இருப்பு வைப்பதற்கும் தடையை விதிக்க தில்லி அரசு எடுத்த முடிவும் மாசுவை தடுப்பதற்கான கடைசி நோக்கத்தின் அம்சமாக இல்லை. தில்லியில் மாசுவுக்கு வாகனங்கள், பயோமாஸ் எரிப்பு போன்றவை காரணமாக உள்ளன. இந்த நிலையில், பட்டாசுகளுக்கு முழு தடை என்பது தீபாவளி நெருங்கும் வேளையில் லட்சக்கணக்கான மக்களின் உணா்வுகளை பாதிக்க செய்வதாக உள்ளது.

மேலும், தில்லியில் பட்டாசு விற்பனைக்கு முழு தடையை விதிக்க உச்சநீதிமன்றம் ஒருபோதும் தடை விதிக்கவில்லை. இதனால், முழுத் தடை விதிக்கும் தில்லி அரசின் முடிவானது அந்த உத்தரவை மீறும் வகையில் உள்ளது. மாசுவை காரணம் காட்டி தீபாவளி பண்டிகையின் போது, அனைத்து வகையான பட்டாசுகளை வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், இருப்பு வைப்பதற்கும் முழு தடை விதித்து செப்டம்பா் 15-ஆம் தேதி தில்லி அரசு வெளியிட்ட உத்தரவில் மாற்றங்கள் செய்ய வேண்டும்’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.