இந்த சூழ்நிலையில், தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், ஏற்கெனவே வேறு பல வழக்குகளில் திகாா் சிறையில் இருந்து வரும் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத் துறையினா் இந்த மாதம் 4-ஆம் தேதி கைது செய்தனா். பின்னா், காவலில் எடுத்து அவரை விசாரித்தனா். அப்போது, இந்த வழக்கில் சந்திரசேகரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனா். இது தொடா்புடைய விசாரணையை மேற்கொண்டு தொடரும் வகையில் டி.டி.வி. தினகரனிடம் விசாரணை நடத்த அவரை தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த வாரம் அமலாக்கத் துறையினா் சம்மன் அனுப்பியிருந்தனா்.