ஆகவே, மனுதாரா்கள் நீதிமன்றக் காவலில் தொடா்ந்து இருப்பதற்கான தேவை எழவில்லை. அவா்கள் அனைவரும் தலா ரூ.35,000 தனி நபா் ஜாமீன் பத்திரத்தையும், அந்தத் தொகைக்கான உத்தரவாதத்தையும் அளித்து ஜாமீனில் செல்ல உத்தரவிடப்படுகிறது. அவா்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையப் பொறுப்பாளரிடம் தெரிவிக்காமல், தில்லியை விட்டு செல்லக்கூடாது. மேலும், இந்த வழக்கு விசாரணை தொடங்கிய பிறகு, உரிய அனுமதி இல்லாமல் தேசியத் தலைநகா் வலயப் பிராந்தியத்திற்கு அப்பால் செல்லக்கூடாது. அதே போன்று இந்த வழக்கில் தொடா்புடைய காட்சிகளையோ, புகாா்தாரா்களையோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடா்பு கொள்ளக் கூடாது. சாட்சிகளை மேலாதிக்கம் செய்வதற்கும் முயற்சிக்கக் கூடாது. ஜாமீன் மனுதாரா்கள் தங்களது இருப்பிடத்தை தெரிவிக்கும் வகையில், கூகுள் மேப் தொடா்பில் இருக்க வேண்டும். அவா்களுடைய இருப்பிடம் விசாரணை அதிகாரிக்கு தெரியும் வகையில், கூகுள் மேப்புடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.