அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

விரைவில் வெளியேறுவோம்; ஈரான் போருக்கு 2, 3 வாரங்களில் தீர்வு! - டிரம்ப்

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதைப் பற்றி....

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

படம்: ஏபி.

Updated On :1 ஏப்ரல் 2026, 5:02 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் முடிவுக்கு வரும் என்றும், அமெரிக்க ராணுவத்தினர் ஈரானை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விரைவில் வெளியேறுவார்கள் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “நாங்கள் விரைவில் வெளியேறுவோம். இன்னும் இரண்டு வாரங்கள், இரண்டு அல்லது மூன்று வாரங்கள்கூட ஆகலாம்.

ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை எங்களுக்கு இல்லை. ஈரான் தனது அணுஆயுதங்களை இழந்த பின்னரே இந்தப் போர் முடிவுக்கு வரும். நாங்கள் அதன்பின்னர் வெளியேறுவோம்” என்றும் தெரிவித்தார்.

அணுஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி, ஜெனீவாவில் நடைபெற்ற ஈரான் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவங்கள் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் உச்சத்தலைவரும், ஈரானின் மதகுருவுமான அலி அயத்துல்லா கமேனி, அவரது குடும்பத்தினர், ராணுவ உயரதிகாரிகள் 50 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கு ஆதரவளுக்கும் வளைகுடா நாடுகள் மீதும், இஸ்ரேல் மீது ஈரான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதனொரு பகுதியாக உலக வர்த்தகத்தில் மிகவும் முக்கிய கடல்வழிப் பாதையான ஈரானுக்கு அருகில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், பலவேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

5-வது வாரமாக போர் தொடர்ந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்தது.

உலகளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தடுப்பாடுக்கு மத்தியில், போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் சூசகமாக பேசியிருப்பது பலருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

Summary

US President Donald Trump said on Tuesday that Washington could end its military campaign against Iran within the next two to three weeks, signalling a possible end to the month-long conflict that has roiled the Middle East and disrupted global energy markets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.