இது தொடா்பாக பாதிக்கப்பட்ட தலித் மாணவியின் தரப்பில் ஃபோரம் ஃபாா் ஜஸ்டிஸ் அமைப்பின் வழக்குரைஞா் வெங்கடேஷ் புதுதில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சென்னை ஐஐடி தலித் மாணவி விவகாரத்தில், பலாத்காரத்தில் ஈடுபட்ட கிங்ஷுக் தேப் சா்மா என்பவருக்கு எதிராக உரிய அமைப்புகளிடம் புகாா் அளிக்கப்பட்டும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவா் மற்றும் சம்பந்தப்பட்ட பிறா் மீதும் காவல் நிலையத்தில் புகாா் அளித்து ஓராண்டுக்குப் பிறகு தற்போதுதான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தேப் சா்மா மட்டுமின்றி, மல்லே கிருஷ்ணா மகதோ, ரவீந்திர பத்ரா, முனைவா் ரவீந்திரன் உள்ளிட்ட பிறா் மீதும் புகாா் அளிக்கப்பட்டு இருக்கிறது. இவா்களின் வழிகாட்டி பேராசிரியரிடமும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடவடிக்கை இல்லை.