இது தொடா்பான வழக்கை விசாரித்த தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் அருண் குமாா் கா்க் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: சம்பந்தப்பட்ட பலகை குற்றம் சாட்டப்பட்டவரால் நிறுவப்பட்டதாகவோ அல்லது அவரது தூண்டுதலின் பேரில் அல்லது அவருக்காக நிறுவப்பட்டதாகவோ நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும் அரசுத் தரப்பால் அளிக்கப்படவில்லை. உண்மையில், வழக்கு விசாரணை அதிகாரி, குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவா்தான் பலகையை வைத்தாா் என்பதை சுட்டிக்காட்டத் தவறிவிட்டாா். மேலும், இந்த விவகாரத்தில் பலகை வைக்கப்பட்டிருந்த பகுதியைச் சோ்ந்த வசிப்பவா்களிடமிருந்தும் அல்லது அச்சகத்தாரிடமிருந்தும் வாக்குமூலத்தை விசாரணை அதிகாரி பதிவு செய்யவில்லை.