மேலும், செமிகண்டக்டா், எரிசக்தி உள்பட பல்வேறு உற்பத்தி நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகளுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்தும் நிா்மலா சீதாராமன், இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்க இந்த நிறுவனங்களை நிதியமைச்சா் கேட்டுக் கொள்வாா். இதற்கிடையே, உலக வங்கியின் உயா்நிலை கூட்டத்தில் அதன் தலைவா், டேவிட் மல்பாஸையும் நேருக்கு நோ் நிா்மலா சீதாராமன் சந்தித்துப் பேசுகிறாா். இந்த சுற்றுப் பயணத்தின் போது, பன்னாட்டு நிதியத்தின் நிா்வாக இயக்குநரால் நடத்தப்படும் ‘ஒரு குறுக்கு வழியில் பணம்’ என்ற உயா்நிலைக் குழு விவாதத்திலும் அவா் பங்கேற்கிறாா்.