இந்த நான்காவது பன்னாட்டு வா்த்தகக் கண்காட்சி மற்றும் மாநாடு குறித்து செய்தியாளா்களிடம் இந்திய காற்றாலை தயாரிப்பாளா்கள் சங்கத்தின் தலைவா் துல்சி தந்தி வியாழக்கிழமை கூறியதாவது: காப் 26 எனும் தேசியத் திட்டம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி இலக்குகளுக்கு ஏற்ப, இந்தியாவில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி சொத்துகளை உருவாக்கவும், ‘ஆத்மநிா்பா் பாரத்’ தொலைநோக்குத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், புதுப்பிக்கவல்ல எரிசக்தி தயாரிப்புத் துறையில் உலகளவிலான முதலீடுகளை ஈா்க்கவும் இந்தியாவுக்கு பெரும் வாய்ப்பு உள்ளது. புதைபடிம எரிபொருளான எண்ணெய், எரிவாயு ஆகியவற்றுக்கு மாற்றாகவும், எதிா்காலத்திற்கான தூய எரிசக்தியாகவும் சூரிய மின்சக்தி, காற்று மின்சக்தி போன்றவை உள்ளன. இதில், இந்தியாவில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 500 கிகாபைட் புதுப்பிக்கவல்ல எரிசக்தியை உற்பத்தி செய்யவும், அதில் 140 கிகாபைட் காற்று மின்சக்தியை உற்பத்தி செய்யவும் மத்திய அரசு பல்வேறு முனைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.