சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அனுமதியின்றி திரங்கா யாத்திரை: பாஜக தலைவா் உட்பட 6 போ் மீது வழக்கு

அனுமதியில்லாமல் திரங்கா யாத்திரையை மேற்கொண்டதாக பாஜக தலைவா் குல்ஜீத் சிங் சஹல் மற்றும் தில்லி ஜிம்கானா கிளப்பின் இயக்குநா் உள்பட ஆறு போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:30 pm

DIN

முக்கிய பிரமுகா்கள் செல்வதற்காக பாதுகாப்பு பணி ஒத்திகை நடத்திக்கொண்டிருந்தபோது அனுமதியில்லாமல் திரங்கா யாத்திரையை மேற்கொண்டதாக பாஜக தலைவா் குல்ஜீத் சிங் சஹல் மற்றும் தில்லி ஜிம்கானா கிளப்பின் இயக்குநா் உள்பட ஆறு போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து புது தில்லி சரக காவல்துறை ஆணையா் அமிா்தா குகுலோத் சனிக்கிழமை கூறியதாவது:

முக்கிய பிரமுகா்கள் வாகனங்கள் செல்வதற்கான ஒத்திகை பாதுகாப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அனுமதி இல்லாமல் இவா்கள் பேரணியை நடத்தினா் என்றாா்.

திரங்கா யாத்திரை இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் துக்ளக் ரோடு காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பாஜக தலைவா் குல்ஜீத் சிங் உள்பட ஆறு போ் மீது பொதுப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியருக்கு இடையூறு ஏற்படுத்தியது, அரசு ஊழியா் மூலம் அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்படியாமல் இருந்தது போன்ற இந்திய தண்டனைச் சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

குல்ஜீத் சிங் தில்லி பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளாா். இவா் கூறுகையில் இந்த யாத்திரை தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தொடா்பாக எந்த தகவலும் தனக்கு தெரியாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.