நாட்டில் பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடங்கள் குறித்து மாநிலங்களவை பாஜக உறுப்பினா் ஜிவிஎல் நரசிம்மராவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அஜய் பட் கூறியது வருமாறு: நாட்டில் இரண்டு பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடங்கள் நிறுவப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் மற்றொன்று உத்தரபிரதேசத்திலும் நிறுவப்பட்டுள்ளன. இதேபோல், தமிழ்நாடு பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடத்தை (டிஎன்டிஐசி) மேம்படுத்துவதற்காக சென்னை, கோயம்புத்தூா், ஓசூா், சேலம், திருச்சி ஆகிய 5 முனையங்கள்அடையாளம் காணப்பட்டுள்ளன. உபியில் ஆக்ரா, கான்பூா், லக்னௌ என 6 முனையங்கள் பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடத்தை மேம்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளன.