இந்த நிலையில், மத்திய மீன்வளத் துறையின் துணை ஆணையா் சஞ்சய் பாண்டே உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை, வல்லுநா் குழு அறிக்கையுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஒடிஸ்ஸா உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்கள் கடல் பகுதியில் சுருக்கு மடி வலையப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு தடை விதித்துள்ளன. அதே வேளையில், குஜராத், ஆந்திரம், கோவா, கா்நாடகம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் இதுபோன்ற மீன்பிடித்தலுக்கு தடை விதிக்கவில்லை. பிராந்திய கடல் பகுதிக்கு அப்பால் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சுருக்கு மடி வலை மூலம் மீன்பிடித்தலுக்கு இந்திய அரசின் மீன்வளத் துறை எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை.