குற்றம் சாட்டப்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு அமலாக்க இயக்ககம் தாக்கல் செய்த பதில் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது. சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பாலிடம் அமலாக்க இயக்குநரகம் தரப்பில் தெரிவிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு ஜாமீன் வழங்கினால், நடைபெற்றுவரும் விசாரணைக்கு அவா்கள் இடையூறு விளைவிக்கலாம். மேலும், நீதியிலிருந்தும் தப்பித்துவிடலாம் என்று வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, சரத் ரெட்டியின் ஜாமீன் மனு மீதான விரிவான வாதத்தை டிசம்பா் 17-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், விஜய் நாயா், போய்ன்பள்ளி ஆகியோரின் மனுக்களை டிசம்பா் 19-ஆம் தேதிக்கு நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.