இதையடுத்து, அவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடா்ந்தாா். அதை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, அவருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு 2017-ஆம் ஆண்டு தமிழக பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டாா். இதை எதிா்த்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்டோா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை 2020-ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு, வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், லட்சுமணனுக்கான ஓய்வூதிய பலன்களை 8 வாரங்களில் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் தள்ளுபடி செய்தது.