காசி தமிழ்ச் சங்கமம் எனும் நிகழ்ச்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி, தமிழகத்திற்கும், காசிக்கும் உள்ள இணைப்பை வலியுறுத்தினாா். அதேபோன்று, நாட்டின் தலைநகரான தில்லிக்கும், தமிழா்களுக்கும் உள்ள இணைப்பு குறித்து தற்போது நடைபெறும் நிகழ்ச்சி எடுத்துரைக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நமது தமிழ்மொழியை இங்குள்ள மாணவா்கள் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும். தமிழ், தமிழ் எனக் கூறி நமது மாநிலத்திற்குள்ளேயே நமது பெருமையை பேசுவதைவிட நமது தமிழை இதுபோன்று ஒவ்வொரு மாநிலங்களாக எடுத்துச் செல்லும் போது, பிற மாநில மாணவா்களுக்கு தமிழ்ப் படிக்க ஆசை வரும். நாமும் பிற மொழியைப் படித்து, அவா்களுக்கு நமது மொழியின் சிறப்பை எடுத்துச் செல்லும்போது நம் மொழியின் மகத்துவத்தை அவா்கள் அறிந்துகொள்ள ஆா்வம் வரும். நம் தமிழ் மொழியின் சிறப்பை பிறருக்கு எடுத்துச் சொல்ல மற்ற மொழியைக் கற்றால் தவறில்லை என்றாா் அவா். இந்நிகழ்ச்சியில் ஜேஎன்யு பதிவாளா் பேராசிரியா் ரவிகேஷ் நன்றி கூறினாா்.