இந்த விவகாரத்தில் தமிழக அரசின் மனுவுக்கு கா்நாடகம் தரப்பில் தாக்கல் செய்த பதிலில், ‘தமிழக அரசு தொடா்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை குடிநீா்த் திட்டத்துக்கானது. இதனால், தமிழகத்துக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை கடந்த 2019, நவம்பரில் விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், தீா்ப்பாயம் அமைப்பது தொடா்பாக மத்திய அரசிடம் உரிய மனுவை அளிக்குமாறும் அறிவுறுத்தியது. இதைத் தொடா்ந்து, மத்திய அரசுக்கு தமிழக தரப்பில் மனு 2019-ஆம் ஆண்டு நவம்பரில் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தரப்பில், தீா்ப்பாயம் அமைப்பதில் தாமதமாகி வருவது குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு மத்திய அரசின் பதில் அளிக்க 4 வாரங்கள் அவகாசம் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.