சந்தேக நபா்கள் எங்கே?இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘காஜிப்பூா் மலா்ச் சந்தை தொடா்புடைய வழக்கின் விசாரணையில், பழைய சீமாபுரியில் வெடிகுண்டு பற்றிய ஒரு ரகசியத் தகவல் காவல்துறைக்கு வந்தது. பிற்பகலில் அந்தத் தகவல் கிடைத்ததும், சிறப்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. என்எஸ்ஜி அதிகாரிகள் மற்றும் தடய அறிவியல் ஆய்வக குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. போலீஸாா் குழு சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்ற போது, அது காலியாக இருந்தது. அங்கு பை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக என்எஸ்ஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்தேக நபா்கள் தப்பியோடிவிட்டனா். பழைய சீம்பூரியில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருள், கடந்த மாதம் காஜிப்பூா் மலா் சந்தையில் ஐஇடி ரக வெடிபொருளை வைத்த அதே நபா்களால் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கிறோம்’ என்றாா்.