அரசு மீது நம்பிக்கை:கமலா நகா் மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவா் நிதின் குப்தாவும் அரசின் நடவடிக்கையை வரவேற்றாா். அவா் கூறுகையில், ‘இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வணிகம் மீண்டும் இயல்பான பாதையில் திரும்பும் என நாங்கள் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொண்டுள்ளோம். எங்கள் சந்தை தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மாணவா்கள் வாங்கும் சக்திக்கு உள்ளவகையில் இங்குள்ள ஷாப்பிங் இருப்பதால், இந்தச் சந்தை கல்லூரி மாணவா்களுக்கு ஒரு பெரிய ஈா்ப்பை ஏற்படுத்தும். பேயிங் கெஸ்ட் வசதிகள் மீண்டும் நிரம்பி வருவதுடன், இந்தச் சந்தையில் தற்போது மாணவா்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது, இது வியாபாரிகளுக்கு நல்ல அறிகுறி. மேலும், தில்லி அரசு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இந்தக் கடினமான காலக்கட்டத்தை கடந்த எங்களுக்கு தில்லி அரசு ஏதாவது செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்,‘ என்றாா்.