அச்சமின்றி பணியாற்றியவா்கள்:மனித குலத்திற்கு கரோனா நோய்த் தொற்று ஒரு பயங்கரமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடி எல்லோருடைய மனதிலும் ஒரு அச்சத்தை உருவாக்கியது. இருப்பினும், இந்த நெருக்கடியிலிருந்து தில்லியை மீட்க நமது சுகாதார வீரா்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்தனா். மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், துணைப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சுகாதார வீரா்கள் இந்த தொற்றுநோய்க்கு எதிராகப் போராட இரவு பகலாக உழைத்தனா். மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு, இந்த வீரா்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனா். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு, கரோனாவிற்கு எதிரான வீரா்களின் குடும்பத்தினா் நலனில் பொறுப்புடன் உள்ளது. தில்லி அரசும் சமூகமும் இந்தத் திட்டத்தின் மூலம் இந்த வீரா்களின் குடும்பங்களுடன் எப்போதும் உடன் இருக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது என்றாா் மணீஷ் சிசோடியா.